கோவை, போத்தனூரில் இருந்து பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் நெரிசலைத் தவிர்க்க, கோவை மற்றும் போத்தனூரில் இருந்து பரூணி, தன்பாத் நோக்கி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில் சேவை விவரங்கள்:

  • கோவை – தன்பாத் (06063) வாராந்திர சிறப்பு ரயில்: செப்டம்பர் 5 முதல் நவம்பர் 28 வரை, வெள்ளிக்கிழமைகளில் காலை 11:50க்கு கோவையில் இருந்து புறப்பட்டு, ஞாயிறு காலை 8:30க்கு தன்பாத் சென்றடையும்.
  • தன்பாத் – கோவை (06064) வாராந்திர சிறப்பு ரயில்: செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 1 வரை, திங்கள்கிழமைகளில் காலை 6:00க்கு தன்பாத் புறப்பட்டு, புதன் அதிகாலை 3:45க்கு கோவை வந்தடையும்.
  • போத்தனுார் – பரூணி (06055) வாராந்திர சிறப்பு ரயில்: செப்டம்பர் 6 முதல் நவம்பர் 29 வரை, சனிக்கிழமைகளில் காலை 11:50க்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, திங்கள்கிழமை மதியம் 2:30க்கு பரூணி வந்தடையும்.
  • பரூணி – போத்தனுார் (06056) வாராந்திர சிறப்பு ரயில்: செப்டம்பர் 9 முதல் டிசம்பர் 2 வரை, செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11:45க்கு பரூணி புறப்பட்டு, வெள்ளிக்கிழமை மாலை 3:45க்கு போத்தனுார் வந்தடையும்.

வசதிகள்:

  • ஏ.சி. இரண்டடுக்கு, மூன்றடுக்கு மற்றும் படுக்கை வசதி
  • மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு பெட்டிகள்

இடைநிலையங்கள்:

திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, கூடூர், நெல்லுார், ஓங்கல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில் ரயில்கள் நின்று செல்லும்.

Scroll to Top